வியாழன், 11 மார்ச், 2010
சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக என்னுடைய பிளாக் url ஐ மாற்றி உள்ளேன்:-)
http://senreb.blogspot.com/
மலர்வனத்தின் பார்வையாளர்கள் சிரமம் பாராமல் இந்தப் புது url க்கு வருமாறு அன்போடு அழைக்கிறேன் _()_
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
லேபிள்கள்: பொதுவானவை
ஞாயிறு, 7 மார்ச், 2010
லேபிள்கள்: பொதுவானவை
வெள்ளி, 5 மார்ச், 2010
லேபிள்கள்: பொதுவானவை
வியாழன், 4 மார்ச், 2010
லேபிள்கள்: செல்லங்கள்
வியாழன், 25 பிப்ரவரி, 2010
நான் மாற்று முன் எப்படி இருந்ததுன்னு போட்டோ எடுக்க மறந்துட்டேன் :-(
லேபிள்கள்: கை வண்ணம்
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
லேபிள்கள்: செல்லங்கள்
ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010
1) மணல் ஓவியம் கிட் - 1 அல்லது கருப்பு வெல்வெட் துணி - தேவையான அளவு,
2) விருப்பமான படம்,
3) ஃபெவிக்ளூ - 1,
4) வெள்ளை மணல் (கடைகளில் கிடைக்கும்)
5) தேவையான ஃபேப்ரிக் கலர்கள்,
6) வண்ணம் தீட்ட நெ. 1 பிரஷ் - 1.
செய்முறை:
1) கிட் என்றால் அதிலேயே படம் வரைந்து இருக்கும். இல்லையென்றால் விருப்பமான படத்தை மஞ்சள் கலர் டிரேஸ் பேப்பர் வைத்து துணியில் வரைந்து கொள்ளவும்.
2) படத்தின் அவுட் லைனைக்குள் ஃபெவிக்ளூவை நன்றாக தடவவும்.
5) பிரஷ்ஷின் பின்புறத்தால் அவுட்லைனை விட்டு வெளியே பிசிறாகத் தெரியும் மணலை சீராக்கவும்.
6) ஒரு நாள் முழுதும் நன்கு காய விட்டு, பொருத்தமான ஃபேப்ரிக் கலரை பிரஷ்ஷால் எடுத்து பிசிறின்றி தீட்டவும்.
7) டபுள் ஷேடிங் கூட கொடுக்கலாம்.
லேபிள்கள்: கை வண்ணம்
செவ்வாய், 16 பிப்ரவரி, 2010
லேபிள்கள்: செல்லங்கள்
புதன், 10 பிப்ரவரி, 2010
பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்..........
சின்னக் கோலிக்குண்டு சைஸில் பழுப்பு கலரில் ஒரு முட்டை!! ஐ! ஒரு வழியா நம்ம வீட்டு லவ் பேர்ட்ஸும் முட்டை வெச்சிருக்குன்னு சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் சொன்னாங்க.கூண்டுக்குள் பஞ்சை போட்டு வைங்கன்னு. கொஞ்சம் பஞ்சை பிய்த்து கூண்டுக்குள் போட்டு வைத்தோம். அதைத் தூக்கிக் கொண்டு போய் சட்டிக்குள் வைத்துக் கொண்டது.
ஒரு நாள் விட்டு அடுத்த நாள் எட்டிப் பார்க்கும் போது இன்னொரு முட்டை. அதே போல் ஒரு நாள் விட்டு அடுத்த நாள் மூன்றாவது முட்டை. 21 நாட்கள் ஆகும், குஞ்சு பொரிக்கன்னு சொன்னாங்க. அம்மாக் குருவியும், அப்பாக் குருவியும் மாற்றிமாற்றி சட்டிக்குள் உட்கார்ந்து அடை காத்தது. நாளை எண்னிக் கொண்டே வந்தேன்.
22 வது நாள் காலையில் எழும் போதே ஏதோ வித்தியாசமான சப்தம் கேட்டது. இஸ்க், இஸ்க்னு மெதுவா கேட்டது. எழுந்து நேரே போய் சட்டியைப் பார்த்தால், விரல் நுனி பெருசுக்கு ஒரு புழு போல் ஒன்று சட்டுக்குள் இருந்தது. மூக்கும், கண்ணும் மட்டும் தான் பெரிசா தெரிந்தது. கண் சரியா விழிக்கலை. ஆனா, வாயைத் திறந்து கொண்டே சத்தம் மட்டும் போட்டுக் கொண்டே இருந்தது.
அம்மாக் குருவி வெளியில் வந்து தினையை எடுத்துப் போய் குட்டிக்கு ஊட்டிக் கொண்டே இருக்கும். அப்பாக் குருவி அந்த வேலையைச் செய்யலைன்னு கொத்திக் கொண்டே இருக்கும். அது ஒரு ஓரமாக போய் உட்கார்ந்திருக்கும். எத்தனை சாப்பிட்டாலும் போதாமல் குட்டி கத்திகிட்டே இருக்கும்.
அடுத்த ரெண்டு முட்டையும் எப்ப பொரிக்கும்னு பார்த்துகிட்டே இருந்தால் குட்டி வெளியில் வரவே இல்லை..... ஒரு நாள் ஆபீஸ் போய்ட்டு வந்து பார்த்தால், முட்டைகளை சட்டிக்கு வெளியில் தூக்கிப் போட்டு இருந்தது. உள்ளேஒன்றும் இல்லை. முட்டை கெட்டுப் போய்ட்டா, அப்படித்தான் தூக்கிப் போடுமாம். பாவமாக இருந்தது.
அப்பப்ப எட்டிப் பார்க்கும் போதெல்லாம், குட்டிக்குருவிக்கு லேசாக முடி வந்திருக்கும். பார்க்கவே அருவருப்பாக இருப்பது போல் இருக்கும். நாங்க எட்டிப் பார்த்தாலே அம்மாக் குருவி உள்ளே போய் தன் இறகால் குட்டியை மூடிக் கொள்ளும். அம்மாக்குருவி, அப்பாக்குருவி இரண்டுமே மஞ்சள், பச்சை, கருப்பு கலந்த கலர். ஆனால் குட்டி என்னவோ ஊதா வண்ணத்தில் இருப்பது போல் தெரிந்தது. சரியாக முடி வளராததால் என்ன கலர்னு சரியா தெரியலை. ஆனா, ரொம்ப வேகமாக வளர்ந்துகிட்டு வந்தது. எப்படி சட்டியை விட்டு வெளியில் வரும்னு எங்களுக்கெல்லாம் யோசனையாக இருந்தது.
ஒரு நாள் காலையில் எழுந்து வந்து பார்த்தால் எங்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது........
இன்னும் வளரும்...
லேபிள்கள்: செல்லங்கள்
வெள்ளி, 5 பிப்ரவரி, 2010
இப்படி இருக்க ஒரு நாள்...
வழக்கம் போல் பையன் கூண்டைத் தூக்கி வைத்து குருவிகளை வெளியில் விட்டு ஹாலில் விளையாடிக் கொண்டு இருந்தான். அவர் எழுந்து நடக்கும் நிலையில் இல்லாததால், நான் ரூமில் அவரிடம் பேசிக் கொண்டே சப்பாத்தி தேய்த்துக் கொண்டிருந்தேன். ரூம் கதவு லேசாக திறந்திருந்தது. விளையாடிக் கொண்டே இருந்த மஞ்சள் குருவி ரூமில் என் சத்தம் கேட்கவே, உள்ளே பறந்து வந்திருக்கிறது. பறந்த வேகத்தில் கொஞ்சம் உயரமாகவே பறந்து விட்டது.(சாதாரணமாக அவ்வளவு உயரம் பறக்காது). வந்த வேகத்தில் ஓடிக் கொண்டு இருந்த ஃபேனில் அடிபட்டு என் மடியில் வந்து விழுந்தது. ஐயோ என்று கத்திக் கொண்டே அதை எடுத்து, பையனை தண்ணீர் கொண்டு வரச் சொல்லி வாயில் விட்டேன். எங்குமே காயம் இல்லை. ஆனால், என்னைப பார்த்துக் கொண்டே மெல்ல மெல்ல கண்களை மூடி உயிரை விட்டு விட்டது.....
பையனும், நானும் அழுத அழுகை கொஞ்சமில்லை. பிரிய மனமின்றி கையில் வைத்து அழுது கொண்டே இருந்தோம். வேறு வழியின்றி செடி போட வைத்திருந்த தொட்டி மண்ணில் ஆழக் குழி தோண்டிப் புதைத்தோம்(நாங்கள் இருந்தது இரண்டாவது மாடியில்).
ஒரு குருவியை இப்படி இழந்து விட்டோம். இன்னொன்றைப் பார்க்க ரொம்பவே பாவமாக இருந்தது. எங்கள் சோகமும் அதிகமாக இருந்தது. வேறு ஒன்றை வாங்கி விட்டால் கொஞ்சம் சரியாகும் என்றெண்ணினோம். அச்சு அசல் அதே போல் ஒரு குருவியை என் பையன் வாங்கி வந்தான். இம்முறை சரியாக பெண் குருவியைக் கொடுத்தார்கள். 2 நாட்கள் பேசாமல் இருந்த பச்சைக் குருவியும் அதனுடன் நட்பாகி விளையாட ஆரம்பித்தது. கொஞ்ச நாட்கள் ஆனதும், பெண் குருவி எப்பப் பார்த்தாலும் சட்டிக்குள்ளேயே உட்கார்ந்திருக்குதேன்னு எட்டிப் பார்த்தால்.......... அப்பறம் சொல்றேனே....
லேபிள்கள்: செல்லங்கள்
லேபிள்கள்: செல்லங்கள்
புதன், 3 பிப்ரவரி, 2010
எல்லாமே சீரியசான விஷயங்களாக சொல்லிகிட்டு இருக்கிற மாதிரி இருக்கு. அதானால கொஞ்சம் ரசிக்க என் செல்லங்களைப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு இருக்கேன்.
நான் முதலில் வளர்க்கணும் நினைச்சது லவ் பேர்ட்ஸ் தான். பெட் அனிமல்னாலே சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற சிரமங்கள் இருக்குமேன்னு அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு நினைச்சேன்.
பையன் மீன் தொட்டி வேணும்னு கேட்ட போது கூட ரொம்ப யோசிச்சு, எல்லாம் அவன் பொறுப்புன்னு சொல்லி ஒரு கிறிஸ்மசுக்கு வாங்கி கிஃப்டா கொடுத்தோம். மீன் செத்துப் போகும், திரும்ப வாங்கி விடுவான், செத்துப் போகும் இப்படியே போய் அவனே வெறுத்து கடைசியில் காலியாகவே விட்டுட்டான்.
பையனும் அந்த வருடம் ஸ்கூல் முடித்து காலேஜில் சேர வெளியூர் போய்ட்டா, நாம மட்டும் தனியா இருக்கணுமேன்னு கவலையா இருந்துச்சு. அப்பதான் இவர் என் பர்த்டேக்கு என்ன வேணும்னு கேட்டார். லவ்பேர்ட்ஸ் ஒரு ஜோடி வேணும்னு கேட்டேன். அழகா கூண்டோடு வாங்கிக் கொடுத்தார். லவ்பேர்ட்ஸ் முட்டை வைத்து, குஞ்சு பொரித்து பெரிய குடும்பமா ஆனது போல் கனவெல்லாம் வந்தது.
ரெண்டு லவ் பேர்ட்ஸும் பச்சையும், மஞ்சளும் கலந்த குட்டி குருவிகள். குட்டியாக இருந்ததால் கொத்தாமல் இரண்டுமே என் கையை நீட்டினால் ஏறி உட்கார்ந்து கொள்ளும். ஃபேனை நிறுத்தி விட்டு, எல்லாக் கதவையும் அடைத்து விட்டு கூண்டை திறந்து விட்டால் போதும். இரண்டும் கூண்டு மேலே வந்து உட்கார்ந்து விளையாடிக் கொண்டு இருக்கும். விளையாடியது போதும், உள்ளே போங்கள் என்று சொன்னால் போய்விடும். கதவை சாத்தி விடுவோம். அதிலும் முழுவதும் மஞ்சளாக இருக்கும் குருவி தான் எங்களின் பெட். கைகளில் ஏறி விளையாடும். பச்சை கலந்த குருவி கொஞ்சம் பயப்படும். நான் ஆபீசில் இருந்து வந்தால் போதும். கூண்டின் ஓரம் வந்து இதுக்கும், அதுக்கும் நடந்து என்னைக் கூப்பிடும். நான் மறுபுறம் போய் நின்றால் எப்படியோ கண்டு அங்கும் வந்துவிடும். கீழே உட்கார்ந்து காய் நறுக்கிக் கொண்டு இருந்தால் எட்டிக் கூப்பிடும். கீரை, கொத்தமல்லித் தழைன்னா ரொம்ப இஷ்டமா சாப்பிடுவாங்க.
எங்களுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகி ஆஸ்பிட்டலிலேயே ஒன்றரை மாதம் இருக்க வேண்டி வந்தது. டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்த அன்று என்னைப் பார்த்ததும் இங்கும் அங்கும் ஓடி மஞ்சள் குருவி கத்திய கத்தல் இன்னும் என் காதில் ஒலிக்கிறது. அவரை ஸ்டெரச்சரோடு மேலே தூக்கி வர வந்த எங்கள் ஆபீஸ் நண்பர்கள் அப்படி ஆச்சரியப்பட்டார்கள். கையில் எடுத்ததும் முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியது. ஆறறிவு இருக்கும் மனிதர்களிடம் உள்ள அன்பை விட, அந்தப் பறவைகள் காட்டிய பாசத்தில் அன்று நெகிழ்ந்து அழுதே விட்டேன். நாங்கள் எவ்வளவோ நல்லது செய்தவர்கள் கூட, எங்களை ஆஸ்பிட்டலில் வந்து பார்க்காத ரணம், இந்தக் குட்டிக் குருவிகள் காட்டிய அன்பில் மறந்தது.
வாங்கி ரொம்ப நாளாச்சே, இன்னும் முட்டை வைக்கலையேன்னு ஒரே யோசனையாக இருந்தது. அப்போது தான் அவருக்கு பயிற்சி கொடுக்க எங்க வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிசியோதெரபிஸ்ட் சொன்னார், இரண்டுமே ஆண் குருவிகள் என்று. ஏதாவது ஒன்றைக் கொடுத்து விட்டு வேறு பெண் குருவி மாற்றி வந்து விடுங்கள் என்று சொன்னார். இரண்டுமே எங்களுக்குப் பிடிச்சது. எதைக் கொடுக்க? கூண்டை வேணா பெரிசா மாற்றலாம்னு யோசித்துக் கொண்டிருந்தோம். விபத்தின் தாக்கம் குறையாததால் அவர் முதலில் நடக்கட்டும்,பிறகு பார்க்கலாம்னு இருந்தோம். அப்போது தான்,
அந்த சம்பவம் நிகழ்ந்தது......
மீதி சிறிய இடைவேளைக்குப் பின்..........
லேபிள்கள்: செல்லங்கள்
வெள்ளி, 29 ஜனவரி, 2010
ஆனந்த விகடனில் வெளிவந்ததாக ஆபீசில் சொன்னார்கள். நான் படிக்கவில்லை. பிறந்த குழந்தைக்கு மயக்க கலக்கத்தில் படுத்துக் கொண்டே பால் கொடுத்ததால், குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாம். அதன் கண்களை தானம் செய்தார்களாம். கண்தானம் செய்யப்பட்ட விஷயம் தான் பெரிதாகப் பேசப்பட்டது. ரொம்ப நாட்களாக என் மனதை வதைத்துக் கொண்டிருந்த படுத்துக் கொண்டே பாலூட்டிய விஷயத்தை அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் எனக்கு மட்டும் நெருடிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த இடுகை.
நிறைய பெண்கள் செய்யும் தவறே இது தான். எழுந்து உட்கார்ந்து பால் கொடுக்க சோம்பேறித்தனம். படுத்துக் கொண்டே பால் கொடுப்பது எவ்வளவு ஆபத்தான செயல் என்று இப்பொழுதாவது மற்றவர்கள் புரிந்து கொண்டால் சரி.
கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளாவது மூச்சு தாங்கி குடித்து விடும். பச்சிளங்குழந்தைகளுக்கு படுத்து கொண்டு பால் கொடுத்தால் மூச்சு முட்டும். அப்படி கொடுக்கும் போது நாம் கையால் அழுத்திப் பிடித்து கொடுக்கவும் முடியாது. அப்படியே தூங்கிப் போனால், பால் குழந்தையின் மூக்கிலும் ஏறும் வாய்ப்பு உள்ளது. பிரசவம் ஆனபின் களைப்பாகவும், மயக்கமாகவும், அசதியாகவும் தான் இருக்கும். ஆனால், அதையெல்லாம் பார்த்து குழந்தையின் விலை மதிக்க முடியாத உயிருடன்
விளையாடலாமா?
எவ்வளவு தூக்கக் கலக்கமாக இருந்தாலும், எழுந்து, நன்கு சாய்ந்து உட்கார்ந்து கொண்டு (முதுகுக்கு தலையணை கூட வைத்துக் கொள்ளலாம்) குழந்தையின் தலையை முழங்கைக்கு மேல் வைத்து மார்போடு சேர்த்து பிடித்துக் கொள்ள வேண்டும்.
நீளும் கை குழந்தையின் தொடை வரை தாங்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.அடுத்த கையின் ஆட்காட்டி விரலுக்கும், நடு விரலுக்கும் நடுவே மார்பகத்தை அழுத்திப் பிடித்து குழந்தையின் வாயில் வைத்து பால் புகட்ட வேண்டும்.
பால் அதிகமாக சுரந்தால் பிறந்த குழந்தைகளால் (ஒரு மாதம் வரை) மூச்சு தாங்கி குடிக்க முடியாது. அப்போது விரல்களை நெருக்கிப் பிடித்து பால் குழ்ந்தையின் வாய்க்குள் போகும் அளவை கட்டுப்படுத்த முடியும்.
பால் கொடுத்து முடிந்ததும், குழந்தையை தோளில் சாத்தி முதுகில் சிறிது நேரம் லேசாக தட்டிக் கொடுத்து, (குழந்தைக்கு)ஏப்பம் வந்த பிறகே படுக்க வைக்க வேண்டும்.
முதல் குழந்தை என்றால் நிறைய பெண்களுக்கு இதெல்லாம் தெரியாது. கூட இருக்கும் பெரியவர்கள் தான் சொல்லித் தர வேண்டும்.
நிறைய மருத்துவமனைகளிலும் ஏகப்பட்ட ஃபீஸ் வாங்குகிறார்களே தவிர, பிரசவம் முடிந்தபின் இதையெல்லாம் எந்த மருத்துவரும் பொறுமையாக விளக்கிச் சொல்வதில்லை. அங்கு இருக்கும் நர்சுகளோ குழந்தைக்கு அம்மாவை பால் கொடுக்க சொல்லுங்கம்மான்னு சொல்லிட்டு போய்கிட்டே இருப்பாங்க (சமீபத்தில் பெண்ணுக்கு பிரசவம் ஆன போது நேர்ந்த அனுபவங்கள் தான்).
கொடுமை என்னவென்றால் கூட இருப்பவர்களும் படுத்துகிட்டே பால் கொடுக்கச் சொல்வார்கள். அதைப் பார்த்து, அறிவுரை சொல்லியும் இருக்கிறேன். சரி சரிம்பாங்க. நாம் இந்த பக்கம் வந்ததும் அவங்க வழிக்கு போயிடுவாங்க.நல்லதுக்கு தானே சொன்னார்களென்று தெரிவதில்லை.
இப்பவும் அப்படித்தான், மனம் பொறுக்காமல் கொட்டி விட்டேன். இதைப் படித்து ஒரு சிலராவது புரிந்து கொண்டால் போதும்.
பத்து நிமிட கஷ்டம் பார்த்து
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த
பத்தரை மாற்றுத் தங்கத்தை
பறி கொடுத்து விடாதே மகளே!
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க, கிடைத்ததொரு செல்வத்தை நம் சோம்பேறித்தனத்தாலும், அஜாக்கிரதையாலும் இழக்கலாமோ?
லேபிள்கள்: குழந்தை வளர்ப்பு
செவ்வாய், 26 ஜனவரி, 2010
இல்லையென்றாலும் காலையில் எழுந்து பிரஷ் செய்யும் நேரத்தை வீணாக்காமல், யோசித்து வைத்துக் கொள்ளலாம்.
லேபிள்கள்: சமையல்-பொது
வலைப்பூ முழுவதும் சுத்தத் தமிழில் எழுதலாம், இருப்பினும் பேச்சுத் தமிழுக்கு மாறினால் தான் பதிவுகள் இயல்பாய் இருக்கும். ஆகவே, இனி பேச்சுத்தமிழுக்கு மாறலாமென்று இருக்கிறேன்.
லேபிள்கள்: பொதுவானவை
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
மலர்வனத்தில் பல வண்ண மலர்கள் உண்டு. இவ்வலைப்பூவிலும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.
எனக்குத் தெரிந்த சமையல், கைவேலைப்பாடுகள், கர்ப்பிணி மற்றும் பேறுகால விஷயங்கள், குழந்தை வளர்ப்பு, வாழ்க்கை அனுபவங்கள், புலம்பல்கள் எல்லாம் இடம் பெறும்.
எனக்குத் தெரிந்த சில விஷயங்கள் என்னோடு முடிந்து விடாமல் நிறைய பேருக்கு பலனளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் டைரியாக எழுதி வைத்தால் என் குழந்தைகள் மட்டுமே பயன் பெறுவர். அது கூட சந்தேகம் தான்:-) இப்போதெல்லாம் யார் படிக்க விரும்புகிறார்கள்? எதற்கெடுத்தாலும் கம்ப்யூட்டரும், நெட்டும் தான். எனவே வலைப்பூவாக இருந்தால், என் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, அவர்களைப் போல் உள்ள மற்றவருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தின் விளைவாக மலர்ந்ததே இந்த 'மலர்வனம்'.
மற்றபடி வலைப்பூ உலகில் பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.
ஆனாலும் மணம் நுகர்ந்து செல்பவர்கள், மணத்தின் தன்மையை சொல்லிப் போனால், மலர்வனத்தை மாற்றி அமைத்து அதிக நறுமணம் கமழச் செய்ய ஏதுவாக இருக்கும்.
அன்புடன்,
செந்தமிழ்.
லேபிள்கள்: பொதுவானவை
புதன், 20 ஜனவரி, 2010
ப்ரியமானவர்களுக்கு,
என்னுடைய மலர்வனத்திற்கு வருகை புரியும் அனைவரையும் பூச்செண்டுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்,
செந்தமிழ்.
லேபிள்கள்: பொதுவானவை