புதன், 20 ஜனவரி, 2010

வணக்கம் !

ப்ரியமானவர்களுக்கு,
என்னுடைய மலர்வனத்திற்கு வருகை புரியும் அனைவரையும் பூச்செண்டுடன் வரவேற்கிறேன்.
அன்புடன்,
செந்தமிழ்.

19 கருத்துகள்:

இமா க்றிஸ் சொன்னது…

வந்தேன். _()_ :)

அன்புடன் இமா

செந்தமிழ் செல்வி சொன்னது…

வாங்க இமா! என்னுடைய மலர்வனத்திற்கு உங்களின் வருகை முதலாவது வருகை. இன்று தான் கொஞ்சம் நேரம் கிடைத்து மலர்வனத்தை மக்களுக்கு திறக்க முடிந்தது:-)
தொடர்ந்து எமக்கு ஆதரவு தாருங்கள். குறை இருப்பினும் சொல்லுங்கள். திருத்திக் கொள்ளுகிறேன்.

ஸாதிகா சொன்னது…

அன்புத்தோழி,உங்கள் மலர்வனத்திற்கு என் ப்ரிய வாழ்த்துக்கள்.உங்கள் பதிவுகள் நிச்சயமாக அனைவருக்கும் பயன் படும்.வலைப்பூ உலகில் உங்கள் வலைப்பூ தனியிடம் பெறவும் இந்த ஸ்னேகிதி மீண்டும் வாழ்த்துகிறேன்

செந்தமிழ் செல்வி சொன்னது…

அன்பு தோழி ஸாதிகா,
உங்கள் பாராட்டுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து உங்களது ஆதரவையும் மேலான கருத்துக்களையும் தாருங்கள்.
அன்புடன்,
செல்வி.

Vijiskitchencreations சொன்னது…

அக்கா வணக்கம். நானும் உங்க மலர்வனத்தில் புகுந்துவிட்டேன். உங்கள் வலைபூவாகிய மலர்வனம் நல்ல பொலிவோடும் உலகில் எல்லா இடமும் தெரியும் படியாக வளர வாழ்த்துக்கள். குட்டி பையன் சுட்டி.

செந்தமிழ் செல்வி சொன்னது…

விஜி,
வரவு நல்வரவாகுக. வாழ்த்துக்கு நன்றி. குட்டிப் பையன் நிஜமாகவே ரொம்ப சுட்டி தான்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. சொன்னது…

எனக்கு தெரியாம இந்த ஒரு தோட்டம்? :))

இது தான் ஜோயலா? குட்டி ரொம்ப க்யூட்டா இருக்கார்..

ப்ளாக் அமைப்பும் அழகா இருக்கு.. தொடருங்க செல்வி..

செந்தமிழ் செல்வி சொன்னது…

அன்பு ட,
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.
க்யூட் குட்டியோட பேர் ஜோஏஸ், செல்லமா ஜோ.
நன்றி.

ஹைஷ்126 சொன்னது…

இதற்கு முன் வந்து ஒரு வாழ்த்து போட்டு இருந்தேனே அதை காணவில்லை?

இந்த மலர்வனம் வாசம் உலகெங்கும் வீச என் வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்

செந்தமிழ் செல்வி சொன்னது…

வாருங்கள் சகோதரரே! தங்கள் வரவு நல்வரவாகுக. முதல் பதிவு வரவில்லையே.
வேலைப்பளு அதிகம்னாலும் அப்பப்ப வந்து கருத்துக்கள் சொல்லுங்க. வருகைக்கும், இடுகைக்கும் நன்றி.

athira சொன்னது…

செல்வியக்கா... மலர்வனத்துள் நுழைந்த வண்டுகளில் நானும் ஒரு வண்டாக வந்துவிட்டேன்.. மது அருந்த. இனிப்பாகத் தர வேண்டியது உங்கள் பொறுப்பு.. வாழ்க.. வளர்க.

என்னை விட்டுவிட்டு எல்லோரும் பொன்னூஞ்சல் ஆடுகிறார்கள்.. அதிரா இல்லாமல் ஊஞ்சலோ என ஓடி வந்துவிட்டேன்.. நல்ல நாள் வரும்வரை காத்திருந்தேன். மலர்வனம் எனப் பெயரிட்டிருப்பதால்.. பல பூக்கள் இங்கே மலரும் என எதிர்பார்க்கிறேன்.. சமையல்பூ மட்டுமென்றால்.. அலுத்துவிட்டதெனக்கு.

பின்குறிப்பு:
blog name பார்த்தால், கூட்டுமுயற்சிபோல இருக்கு, ஆனால் வீட்டின் சுத்தப்படுத்தல் கூட்டுதல் மினுக்குதல் எல்லாம் நீங்களோ? இல்லை அதுவும் மாமாவுடனான கூட்டுமுயற்சியோ?, ஏன் கேட்கிறேன் என்றால் முதல்முதலாக வீட்டுக்கு வந்திருக்கிறேன்.. இளங்கோ மாமாவுக்கும் வாழ்த்துக்கள். இல்லையெனில் ”மொட்டைமாடிக்கு போய் அதிராவுக்குக் கொடி பிடிக்கப்போகிறேன்... என்னைத் தெரியவில்லையாக்கும்” எனச் சொல்லிடப்போகிறார்.

அழகாக இருக்கிறது தொடருங்கோ செல்வியக்கா.. அப்பப்ப வருவேன். ரீயும் வடையும் நல்ல சுவையாக இருக்கு செல்வியக்கா நன்றி. நான் வந்துவிட்டேன், இனி என் தொல்லை தாங்காமல் உங்களுக்கு கோபம் வந்தாலும் வரலாம்.. கொன்றோல் பண்ணிக்கொள்ளுங்கோ கோபத்தை:)...

geetha சொன்னது…

செல்விக்கா!
உங்க குறிப்புகள் எல்லாம் அருமை. ஏற்கெனவே அனுப்பிய பதிவு காணவில்லையே?
உங்க குட்டிப்பேரன் "ஜோ" செம க்யூட்!

செந்தமிழ் செல்வி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
செந்தமிழ் செல்வி சொன்னது…

அன்பு அதிரா,
மலர்வனத்தில் நுழையும் எல்லா வண்டுகளுக்கும் இனிப்பான தேன் உண்டு.

/மலர்வனம் எனப் பெயரிட்டிருப்பதால்.. பல பூக்கள் இங்கே மலரும் என எதிர்பார்க்கிறேன்.. சமையல்பூ மட்டுமென்றால்.. அலுத்துவிட்டதெனக்கு./
கண்டிப்பாக, அதனாலேயே மலர்வனம் எனப் பெயரிட்டிருக்கிறேன். சமையலுக்கானது மட்டுமென்றால் இந்நேரம் எத்தனையோ குறிப்பு போட்டிருப்பேன். வித்தியாசமாக எல்லம் கலந்து கொடுக்கவே இருக்கிறேன்.

/blog name பார்த்தால், கூட்டுமுயற்சிபோல இருக்கு, ஆனால் வீட்டின் சுத்தப்படுத்தல் கூட்டுதல் மினுக்குதல் எல்லாம் நீங்களோ? இல்லை அதுவும் மாமாவுடனான கூட்டுமுயற்சியோ?, /
இல்லை அதிரா, இது என் சொந்த மூளை & உழைப்பு. கூட்டுதல், மினுக்குதல் எல்லாம் நானே. இருந்தாலும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு நேரம் ஒதுக்கி தந்தமைக்காக நீ சொன்ன வாழ்த்தை சொல்லி விட்டேன். ஆதனால் இனி நோ கொடி பிடிப்பு;-)

ஒவ்வொரு முறையும் விதவிதமான டிபன் தரப்படும்.
கோபமா? அதைத்தான் எப்போதோ சகோதரர். ஹைஷிடம் கொடுத்து விட்டேனே!! வராமல் இருந்தால் தான் கோபித்துக் கொள்வேன், செல்லமாக:-)
வருகைக்கு, பாராட்டுக்கு, பதிவுக்கு நன்றி.

ஹாய் கீதா,
டோண்ட் ஒர்ரி. அந்தப்பதிவு வேறொரு பதிவின் கீழ் உள்ளது.
பாராட்டுக்கு நன்றி. ஜோவின் எனக்கு ரொம்ப பிடித்த 2 படங்களில் ஒன்று இது.

kavisiva சொன்னது…

செல்விம்மா நானும் வந்துட்டேன் மலரிலே தேனெடுக்க :-)
அன்புடன்
கவிசிவா

செந்தமிழ் செல்வி சொன்னது…

ஹாய் கவி,
வருக! வருக!! பின்னே உங்களையெல்லாம் நம்புத்தானே இந்த மலர்வனத்தையே அமைத்திருக்கேன்:-)

asiya omar சொன்னது…

செல்விக்கா,இந்த மலர்வனத்தில் நானும் வந்து தங்களின் அனுபவங்களை நுகர்ந்து செல்ல வந்து விட்டேன்.வாழ்த்துக்கள்.

செந்தமிழ் செல்வி சொன்னது…

வாங்க ஆசியா,
எல்லாருக்கும் மணமளிக்கவே இந்த மலர்வனம். வருக! மணம் நுகர்க!!!
வாழ்த்துக்களுக்கு நன்றி.

Jaleela சொன்னது…

செல்வி அக்கா வாழ்த்துக்கள், உங்கள் மலர்வனம் அருமை, பூந்தோட்டமாய் மலர வாழ்த்துக்கள்.

நேரமின்மையால் வர முடியவில்லை

கருத்துரையிடுக