ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மலர்வனம் பற்றி...

மலர்வனத்தில் பல வண்ண மலர்கள் உண்டு. இவ்வலைப்பூவிலும் பல்வேறு விஷயங்கள் இருக்கும்.

எனக்குத் தெரிந்த சமையல், கைவேலைப்பாடுகள், கர்ப்பிணி மற்றும் பேறுகால விஷயங்கள், குழந்தை வளர்ப்பு, வாழ்க்கை அனுபவங்கள், புலம்பல்கள் எல்லாம் இடம் பெறும்.

எனக்குத் தெரிந்த சில விஷயங்கள் என்னோடு முடிந்து விடாமல் நிறைய பேருக்கு பலனளிக்க வேண்டும் என்பதே என் ஆசை. நான் டைரியாக எழுதி வைத்தால் என் குழந்தைகள் மட்டுமே பயன் பெறுவர். அது கூட சந்தேகம் தான்:-) இப்போதெல்லாம் யார் படிக்க விரும்புகிறார்கள்? எதற்கெடுத்தாலும் கம்ப்யூட்டரும், நெட்டும் தான்.  எனவே வலைப்பூவாக இருந்தால், என் குழந்தைகளுக்கு மட்டுமன்றி, அவர்களைப் போல் உள்ள மற்றவருக்கும் உபயோகமாக இருக்குமே என்ற எண்ணத்தின் விளைவாக மலர்ந்ததே இந்த 'மலர்வனம்'.

மற்றபடி வலைப்பூ உலகில் பெரிதாக சாதிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை.

ஆனாலும் மணம் நுகர்ந்து செல்பவர்கள், மணத்தின் தன்மையை சொல்லிப் போனால், மலர்வனத்தை மாற்றி அமைத்து அதிக நறுமணம் கமழச் செய்ய ஏதுவாக இருக்கும்.

அன்புடன்,
செந்தமிழ்.

2 கருத்துகள்:

Menaga Sathia சொன்னது…

மேலும் எழுதுங்கள்..படிக்க காத்திருக்கிறோம்...

செந்தமிழ் செல்வி சொன்னது…

நன்றி மேனகா. கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன்.

கருத்துரையிடுக